மூலப்பொருட்களுக்காக பிரம்பு பயிரிடும் அரச வைபவம் 2021.01.21 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவங்ச அவர்களினதும் மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர அவர்களினதும் தலைமையில் வனாத்தவில்லு ரால்மடுவ பிரம்பு சார்ந்த உற்பத்திக் கிராமத்தில் இடம்பெற்றது. அந்த வைபவத்தோடு இணைந்ததாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் பிரம்பு சார்ந்த உற்பத்திகள் தொடர்பாகப் பயிற்சி பெற்ற கைவினைஞர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைவினைஞர்களுக்குப் புதிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
